Saturday 25 June 2011

SDPI ன் மரக்கன்று நடுவிழா

Muthupet PFI -- June 25,
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 3-ஆம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் - திருவல்லைக்கேனி தொகுதியின் சார்பாக மக்கள் நலம் நாடு மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.



இவ்விழாவிற்கு மா நில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் தலமை தாங்கினார். மா நில செயலாளர் ஏ.அபூபக்கர் சித்திக் சிறப்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட தலைவர் பி. முஹம்மது ஹுஸைன் அவர்கள் முன்னிலை வகித்தார். வட சென்னை மாவட்ட தலைவர் அமீர ஹம்ஜா சிறப்பு விருந்தினரக கலந்து கொண்டார்.





இவ்விழாவின் போது தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் முஹம்மது சாலிஹ் அவர்களும் முஹம்மது இஸ்மாயில் அவர்களும் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கி விழாவை துவக்கி வைத்தனர். வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ரஷீத், செயலாளர்கள் சுல்தான் மற்றும் ஜமால் அவர்களும் மேலும் எழும்பூர் தொகுதி தலைவர் அஹமது அலி, மயிலாப்பூர் தொகுதி தலைவர் மீரான், சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது, துணை தலைவர் செய்யது முஹம்மது, பொருளாளர் ரிஸ்வான், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, அமீருல்லாஹ், அப்துல் வஹாப், எம். முஹம்மது அபூபக்கர், டெய்லர் ரஹ்மான், ஊடக தொடர்பாளர் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து சிறப்பு அம்சமாக மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி ஒரு மரக்கன்றையும் மாநில செயலாளர் ஏ. அபூபக்கர் சித்திக் அவர்கள் ஒரு மரக்கன்றையும் நட்டு வைத்து இவ்விழாவை இனிதே நிறைவு செய்தார்கள். இவ்விழாவிற்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேனி கிளையினுடைய நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதை தொடர்ந்து விழாக்குழுவினர் ஐ.மேக்ஸ் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இவ்விழாவிற்கு பொதுமக்களிடையே நல்லதோர் வரவேற்பு காணப்பட்டது.

No comments:

Post a Comment