Wednesday 29 June 2011

பெல் பணிக்காக 13,673 பேர் தேர்வு எழுதினர்

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) 475 கைவினைஞர்கள் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஜூலை 2-ம் தேதி பிற்பகல் வெளியாகும். இந்த முடிவுகளை இணையதளத்தில் காணலாம். இருபது மாநிலங்களைச் சேர்ந்த 13,673 பேர் இந்த தேர்வினை எழுதினர்.
இதில் 10,000-த்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வின் மூலம், மொத்தம் 1325 தொழில்நுட்ப வினைஞர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.

திருச்சியில் 11 மையங்களில் 90 நிமிட காலத்திற்குத் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 1000 பேர் இந்த தேர்வுகளை நடத்துவதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த பணிசேர்ப்பு நடவடிக்கை மூலமாக பெல் நிறுவனம் 200 பொருத்துநர்கள், 130 பற்றவைப்பாளர்கள், 110 பாரம்தூக்கி இயக்குநர்கள், 20 மின்னாளர்கள், 10 உலை இயக்குநர்கள் மற்றும் 5 குழாய்ப் பணியாளர்கள் ஆகியோரை தேர்வு செய்ய உள்ளது.

இவற்றுக்கான நேர்முகத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment