
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த 20-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்குமாறு மன்னார் கோர்ட் உத்தரவுவிட்டுள்ளது. இதையடுத்து நாளை மாலை தமிழக மீனவர்கள் வீடு திரும்புவர்.
No comments:
Post a Comment