Wednesday 29 June 2011

மும்பையில் மீண்டும் ஸ்வைன் ப்ளூ அபாயம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை உலுக்கி வந்த ஸ்வன் ப்ளூ மீண்டும் தன் கோர முகத்தை காட்டியுள்ளது.

மும்பையில் சாண்டிவ்லி என்ற இடத்தில் 37 வயது பெண் ஒருவரும், 3 வய்து பெண் குழந்தையும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொண்டை புண் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு வந்த அவர்களை பரிசோதனை செய்ததில், அவர்களை ஸ்வைன் ப்ளூ தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போல், புனே மற்றும் நாசிக் நகரங்களிலும் இந்நோய் பரவியிருப்பதாக அஞ்சப்படுவதைத்தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 67 என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment