Monday 27 June 2011

இண்டர்போல் தேடும் இலங்கை நபர் விமான நிலையத்தில் கைது!

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இண்டர்போல் தேடும் இலங்கை நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இண்டர்போல் தேடும் இலங்கை நபர் பெய்ரிஸ் ஜோஸப் கனுட் சிறிபாலன் என்பவர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கொழும்பு செல்வதற்காக செனை விமான நிலையம் வந்துள்ளார். கொழும்பு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சம்பிரதாயங்களை பூர்த்தி செய்ய குடியுரிமை பகுதிக்கு வந்துள்ளார்.

தேடப்படும் நபர்கள் பட்டியலில் அவரது பெயர் இருப்பதைச் கண்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை கொழும்பு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுபவர் என்று குடியுரிமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment