Monday 27 June 2011

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க சட்டம்

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தனி நபர் உரிமை பாதுகாப்பு மசோதா` என்ற புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது. இந்த மசோதா, அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.




பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், இம்மசோதா சட்டமாகி விடும். இந்த மசோதாவின்படி, ஒருவரது தொலைபேசி உரையாடலை சட்ட விரோதமாக இடைமறித்து கேட்பவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இடை மறித்து கேட்கப்பட்ட தகவலையோ, ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவலையோ வெளியில் பரப்புபவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment