Monday 27 June 2011

உ. பி. யில் தொடரும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை!

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.


ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

அந்த சிறுவன் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர். பாரபங்கி மாவட்டம் இப்ராகிம்புர் கிராமத்தை சேர்ந்த 12 வயது தலித் சிறுமியை சிவகுமார் என்ற வாலிபர் கற்பழித்து விட்டார். கடந்த 25-ந் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment