Monday 27 June 2011

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 ரிசல்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், முதல் இடத்தைப் பிடித்தார்.


ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வை நடத்தியது.
இத்தேர்வை, ஒரு லட்சம் பேர் எழுதினர். இதில் தகுதி பெற்ற 1,300 பேர், கடந்த ஜனவரி 22,23 ஆகிய தேதிகளில் நடந்த மெயின் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் இருந்து, 129 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

கடந்த 23, 24 ஆகிய தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், முதல் இடத்தைப் பிடித்தார். கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவர், மெயின் தேர்வில் 600க்கு 394.5 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வில் 80க்கு 60 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment