Monday 27 June 2011

திருச்சி, தஞ்சையில் நவீன வசதிகளுடன் பாஸ்போர்ட் மையம்

பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை போக்கும் வகையில் தற்போது மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மைய ங்கள் துவங்கப்பட உள்ளன.


இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை.

இந்த சேவை மையங்கள் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறை, விசாரணை அறை, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, கூடுதலான கவுன்டர்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஜெராக்சும் இங்கேயே எடுத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆன்லைன் மூலம் செயல்படும் இந்த மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கும், ஆன்லைனில் போலீஸ் விசாரணை அறிக்கை தாக் கல் செய்யும் பணிக்காக 8 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இந்த சேவை மையத்துடன் அனைத்து மாவட்ட எஸ்.பி அலுவலகங்களும் பிரத்யேக சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படும். விண்ணப்பங்கள் குறித்த போலீசாரின் விசாரணை அறிக்கை ஆன்லைன் மூலம் சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதனால் விண்ணப்பதாரர்களுக்கு தற்போது உள்ளதை விட, 10 நாட்கள் முன்கூட்டியே பாஸ்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் போலீசாரின் விசாரணை அறிக்கை தேவைப்படாத நபர்களுக்கு 2 நாளிலே பாஸ்போர்ட் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சேவை மையங்கள் 29ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment