Thursday 21 July 2011

மங்களூர் விமான விபத்து: தலா ரூ 75 லட்சம் இழப்பீடு-உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் : கடந்த ஆண்டு மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த 160 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 75 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், இந்த இழப்பீட்டை ஒரு ஆண்டுக்குள் அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் ரூ 35 லட்சம் இழப்பீடு வழங்க முன்வந்தது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சங்கம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சர்வதேச விதிகள் குறைந்தபட்சம் ரூ 72 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த இழப்பீட்டை ஒரு ஆண்டுக்குள் அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment