Thursday 21 July 2011

மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

இந்தியாவின் மக்கள் தொகை நெரிசல் மிகுந்த நகரப்பட்டியலில் சென்னை மாநகர் 2வது இடத்தில் உள்ளது.
புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் கிராமப்புறங்களில் 3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரம் பேரும், நகர்ப் புறங்களில் 3 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.


கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.60 சதவீதம். இதில் கிராமங் களில் வளர்ச்சி விகிதம் 6.49 சதவீதம். ஆனால் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.16 சதவீதமாக இருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சியால் காஞ்சீபுரம் 65.35 சதவீதம் உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
சென்னை நகரில் தற்போது மக்கள் தொகை 46 லட்சத்து 80 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது நகரங்களில் வசிக்கும் மக்கள் தொகையில் 13.30 சதவீதம் ஆகும். அகில இந்திய அளவில் ஒப்பிட்டால் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னை 2-வது இடத்தில் உள்ளது. வடமேற்கு டெல்லியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 29ஆயிரத்து 468 பேர் வசிக்கிறார்கள். அடுத்து சென்னையில்தான் சதுர கிலோ மீட்டருக்கு 26 ஆயிரத்து 903 பேர் வசிக்கிறார்கள்.
மும்பை, கொல்கத்தா நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 20 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் சென்னையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் நெரிசலில் 2-வது இடத்துக்கு வந்துள்ளது. மும்பை, கொல்கத்தா நகரங்களை ஒப்பிடும்போது சென்னை நகரின் எல்லை விரிவடைந்துள்ளது. கிராம மக்கள் பெருமளவில் சென்னையில் வந்து குடி யேறியுள்ளனர். எனவே இங்கு மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது. 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 16 ஆயி ரத்து 317 கிராமங்கள் இருந்தன.
நகரங்களின் விரிவாக்கம் மற்றும் நகரமயமாகுதல் காரணங்களால் இப்போது கிராமங்களின் எண் ணிக¬கை 15 ஆயிரத்து 979 ஆக குறைந்து விட்டது. முன்பு தமிழ்நாட்டில் 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசித்தார்கள். இப்போது 51.55 சதவீதம் பேர்தான் உள்ளனர். நகர்ப்புறங்களில் 25 சதவீதமாக இருந்த மக்கள் தொகை தற்போது 48.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் வளர்ச்சி 15.60 சதவீதம்.
இதில் நகரங்களில் 27.16 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராம பகுதிகளில் 6.49 வீதம்தான் மக்கள் தொகை அதிகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment