Thursday 21 July 2011

காரக்கால் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் கடந்த ஒரு வருட பணிகள்

அன்பார்ந்த வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக‌ சேவைகள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தாங்கள் அறிந்த ஒன்றே. ஒவ்வொரு வருடம் நமது பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். சமூகத்தின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் அனைத்து இந்திய மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது.


அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே! ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் தாங்கள் அளிக்கும் நன்கொடைகள், ஜகாத் போன்றவற்றின் மூலமாகத்தான் நம்முடைய ஒரு வருடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. செய்த பணிகள் எத்தனை இருந்தால் செய்ய வேண்டிய பணிகள் நம் கண் முன்னே குவிந்து கிடக்கிறது. அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முட்டுக்கட்டையாக இருப்பது பொருளாதாரம் மட்டுமே. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமழான் மாதத்தில் உங்களுடைய நன்கொடைகளையும், ஜகாத்தினையும் அல்லாஹ்வின் பாதையில் அதிகரித்து தர வேண்டும் என்று பாசத்தோடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வானாக ஆமீன்!

தங்களின் பார்வைக்காக காரைக்கால் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் கடந்த‌ ஒரு வருட கால பணிகளின் புகைபட காட்சிகளை வெளியிடுகிறோம்.

மேலும் உங்களது துவாவினையும் மேன்மையான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். வஸ்ஸலாம்!





















நன்றி: காரைக்கால் பாப்புலர் ஃப்ரண்ட்

No comments:

Post a Comment