Thursday 21 July 2011

முன்னாள் எம்.எல்.ஏ., அசன்அலி வீட்டில் கொள்ளை

ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் மேலத்தெருவில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி குடியிருக்கிறார்.

இவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். இவரது வீட்டின் அருகே சென்னை தொழில் அதிபர் இஸ்மாயில் வீடு உள்ளது.


இவர்களது வீடுகளில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் பின்புறம் மாடி வழியாக கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.


பின்னர் 2 வீடுகளில் இருந்த பீரோவை உடைத்து பட்டு சேலை, வெள்ளி பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment