Thursday 7 July 2011

முலாயம் சிங் யாதவ் மற்றும் அசாருதீன் எம் பி கைது

சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், காங்கிரஸ் எம்பி முகமது அசாருதீனும் உத்தரப் பிரதேச போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
மொராதாபாதில் தடை உத்தரவு நடைமுறையில் உள்ள வன்முறை பாதித்த கிராமத்துக்கு செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


முலாயம் சிங் யாதவ் டெல்லி-உத்தரப்பிரதேசம் இடையே காஸியாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வன்முறை பாதித்த அஸதால்பூர் கிராமத்துக்கு செல்ல முயன்ற அஸாருதீன் மொராதாபாதில் கைது செய்யப்பட்டார்.
போலீசார் தன்னைக் கைது செய்தது சட்டவிரோதம் என்றும், அரசியல்வாதிகளின் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மாயாவதி அரசு ஈடுபட்டு வருவதாகவும் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment