Tuesday 5 July 2011

நியமன உறுப்பினர் சிந்தியா பிரான்சிஸ்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை, ஜூலை 4: தமிழக சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக ஆங்கிலோ-இந்தியரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் (56) நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார்.  மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மயக்கவியல் துறை நிபுணராக சிந்தியா உள்ளார். 

தமிழக சட்டப் பேரவையில் 234 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவைக்கு வருகின்றனர். ஒருவரை ஆளுநர் நியமனம் செய்கிறார். 

அந்த வகையில், 14-வது சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக ஆங்கிலோ-இந்தியரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.2001-06ல் அதிமுக ஆட்சியிலும் ஆங்கிலோ-இந்தியர் பிரதிநிதியாக பெண் ஒருவரே நியமிக்கப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment