Saturday 2 July 2011

சவுதி அரேபியா: தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே அல் பதா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் 2 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 இந்தியர்கள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களின் உடலை இந்தியா கொண்டு வர இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருவதாக மந்திரி இ.அகமது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment