Friday 1 July 2011

பினாமி சொத்துகளை அரசே எடுத்துக்கொள்ள சட்டத் திருத்தம்

பினாமி சொத்துகளை அரசே கையகப்படுத்தி எடுத்துக்கொள்ள வகை செய்யும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கலாகிறது.
ஊழல் மற்றும் லோக்பால் சட்டம் குறித்து மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக வரிந்துக்கட்டிக்கொண்டு பிரச்சனை எழுப்ப தயாராகி வரும் நிலையில், அதனை சமாளிக்கும் விதமாகவே இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment