Tuesday 12 July 2011

மாட்டை வைத்து கட்சி நடத்தும் பாரதிய ஜனதா!

பாரதிய ஜனதா கட்சி நடிகை ஹேமமாலினியை கண்டித்து தஞ்சையில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் தமிழர் வீர விளையாட்டு பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




 தமிழ்நாடு வீர விளையாட்டு பேரவையின் தஞ்சை மாவட்டம் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி 3வது கேட் வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தமிழர் வீர விளையாட்டு பேரவை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் வீர விளையாட்டுக்கலையை பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசி தடை செய்ய வேண்டும் என்று கூறிய நடிகையும், ஹிந்துத்துவா பாரதிய ஜனதா எம்.பி.யு.மான ஹேமமாலினியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஹேமமாலினிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் வீரத்தைப்பற்றி தெரியாத ஹேமமாலினியை கண்டிப்பதோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாரதிய ஜனதாவுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் மதக்கலவரம் பண்ணுவது அதை வைத்து அரசியல் செய்வது. ஈழத்து மக்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் இதற்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. அதை தடுக்க எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை அதை விட்டு விட்டு மாடு என்றதும் வரிந்து கெட்டி கொண்டு வந்து விடுகிறார்கள்.

மாட்டுக்கு ஒரு ஆபத்து என்றதும் ஓடி வரும் இவர்கள் மனிதர்களை ஈவிரக்கமில்லாமல் கொல்பவர்கள். குஜராத்தில் பெண்களை கற்பழித்து தீயில் போட்டு கொன்றவர்கள். கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயதத்தில் குற்றி கொன்றவர்கள் தான் இந்த ஹிந்த்துதுவா பயங்கரவாதிகள்.

No comments:

Post a Comment