Thursday 28 July 2011

ஆப்கானிஸ்தான் கந்தஹாரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் நகர மேயர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இன்று  நடைபெற்ற  தற்கொலைத் தாக்குதலில், அந் நகர மேயர்  பிதா குலாம் ஹயிதர் ஹமீத்  கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மக்கள் குறைகேட்கும் நிகழ்வொன்றில் இவர் கலந்து கொண்டிருந்த போதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும்,



தலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒசாமா பின்லேடன் படுகொலையின் பழிவாங்கலாகவே இத் தாக்குதலும் இருக்கலாம் எனவும், அரசியல் நிர்வாகப் பிரிவினரை குறிவைத்து அன்மையில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குவலாக இது இன்று நடந்துள்ளது.

பொதுமக்களுடன் கலந்திருந்த தாக்குதல் நடத்திய நபர் தன்னுடன் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை வெடிக்க வைத்தே இத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது.

No comments:

Post a Comment