Wednesday 22 June 2011

அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல்

வாஷிங்டன், ஜூன்.22: தலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளைவிட இந்தியாவைத்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர்.



அல் காய்தா தலைவர் பின்லேடனை சமீப காலமாக யாரும் விரும்பவில்லை என்றாலும் அவரது மரணம் மோசமான ஒன்று என பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 14 சதவீதத்தினர் மட்டுமே அவரது மரணம் நல்ல விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.




பியு ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.


பின்லேடனின் மறைவிடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் நம்புகிறார்கள். இந்த தாக்குதலினால் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசல்கள் வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தோய்பா அமைப்புக்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 27 சதவீதத்தினர் அந்த அமைப்பை ஆதரிக்கின்றனர்.


இந்தியா, அல் காய்தா, தலிபான் ஆகியவற்றில் எது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தல் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 57 சதவீதத்தினர் இந்தியாதான் என பதிலளித்துள்ளனர்.


இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது முக்கியம் என்று 10-ல் 7 பேர் கருதுகின்றனர். இந்தியாவுடனான வர்த்தகம் அதிகரிப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர். 2 நாடுகளிடையே பதற்றத்தைக் குறைக்க மேலும் பேச்சுவார்த்தை நடத்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment