Saturday 11 June 2011

ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பாபா ராம்தேவ் ஹிமாலாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப்பார்க்க அரசியல்வாதிகளும் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வருவதால் அந்த மருத்துமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நோயாளர்களை சந்திக்க வரும் உறவினர்களை மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்காததால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். நோயாளர்களை நலம் விசாரிக்க வரும் உறவினர்களும் நண்பர்களும் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சாலைவிபத்தில் படுகாயமடைந்து அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தமது சகோதரருக்கு உணவு மற்றும் தண்ணீர்கூட கொண்டுசெல்ல முடியவில்லை; இதற்கான காரணத்தை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது, விஐபி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை எனது சகோதரர்தான் எனக்கு விஐபி. அரசு இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு நோயாளரின் சகோதரர் G.C.காசோல் வருத்ததுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment