Thursday 4 August 2011

சிரியா அரசின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

சிரியாவில். ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்தினர் பீரங்கிகளில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாவில், சிரியா ராணுவம் நடத்தியத் தாக்குதலில் டஜன் கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 140 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக ஷமா நகரில் வீதியில் நடந்து செல்பவர்களை சிரியா ராணுவம் கடுமையாக தாக்கி, கொன்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் சிரியா ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் 1600 மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா ராணுவம், அப்பாவி பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நேற்று கண்டனம் தெரிவித்தது.

சிரியா அரசுக்கு எதிராக முதன் முறையாக ஐ.நா. கவுன்சில் இந்தக் கண்டனத்தை வெளியிட்டு உள்ளது. லிபியாவில் நேட்டோப் படைகள் முகாமிட்டு உள்ளன. அதே போன்று சிரியாவிலும், ஐ.நா. குறுக்கீடு வரலாம் என்ற அச்சம் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது.

நேற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் ஐரோப்பாவை சேர்ந்த உறுப்பினர்கள் சிரியா அரசு கண்டனத்திற்கு கடும் தீர்மானம் கொண்டு வந்தனர். மனித உரிமை விசாரணையும் நடைபெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment