Thursday 4 August 2011

இலவச ஆடு, மாடு திட்டத்துக்கு ரூ. 191 கோடி, நெல்லை, ஓரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் : பட்ஜெட் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையும், புறநகர் காவல்துறையும் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் ஓபன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று 2011-12ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.

காலை 10.40 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதில் முக்கிய அறிவிப்பாக இலவச ஆடுகள், மாடுகள் திட்டத்துக்கு மொத்தமாக ரூ. 191 கோடி நிதி நடப்பாண்டில் ஒதுக்கப்படுகிறது. இதில் ஆடுகள் திட்டத்துக்கு மட்டும் ரூ. 135 கோடி ஒதுக்கப்படுகிறது. மாடுகள் திட்டத்துக்கு ரூ. 56 கோடி ஒதுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தலா 4 ஆண்டுகள் வழங்கப்படும். அதேபோல ஏழை விவசாயிகளுக்கு கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படும். மொத்தம் 60,000 மாடுகள் இந்த ஆண்டு வழங்கப்படும்.

மேலும் சென்னை மாநகர காவல் ஆணையமும், புறநகர் காவல் ஆணையமும் ஒன்றாக இணைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் சென்னைப் பெருநகர் காவல் ஆணையமாக அது செயல்படும்.

நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த காவல் ஆணையத்தின் நிர்வாகம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பட்ஜெட் துளிகள்:

- பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

- ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி அமைக்கப்படும்

- காவல்துறை நவீனத்திற்கு ரூ.51 கோடி

- சென்னை மாநகருடன், புறநகர் காவல் ஆணையரகம் இணைப்பு

- சேலம், நெல்லை உள்பட 6 நகரங்களில் சைபர் கிரைம் ஆய்வகங்கள்

- 16,000 பேராக ஊர்க்காவல் படையினர் அதிகரிப்பு

- ஊர்க்காவல் படையினருக்கான தினப்படி ரூ. 150 ஆக அதிகரிப்பு

- தமிழக திட்டப் பணிகளுக்கு ரூ. 91.936 கோடி

- சிறைகள் மேம்பாட்டுக்கு ரூ. 117 கோடி

- புதிய சென்னை பெருநகர் காவல் ஆணையகம் நான்கு மண்டலங்களைக் கொண்டதாக இயங்கும்

- நடப்பாண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு

- விதை மானியத்திற்காக ரூ. 85.09 கோடி ஒதுக்கீடு

- தடையில்லாமல் உரம் வழங்குவதற்கான மானியம் ரூ. 150 கோடியாக உயர்வு

- விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க ரூ. 3000 கோடி ஒதுக்கீடு

- சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணிய நீர்ப்பாசனத்திற்கு 100 சதவீத மானியம்

- ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு

- 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில்

- முத்தரசநல்லூரில் ரூ.32 கோடியில் தடுப்பணை

- போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும்

- விவசாயிகளுக்கு 60,000 கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்

- ரூ. 248 கோடியில் ஒரு லட்சம் சூரிய சக்தி தெரு விளக்குகள்

- ரூ. 5000 கோடியில் சாலைகள் சீரமைப்பு

- சென்னை அருகே புதிய கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஆலை

- நெல்லை, ஓரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

- இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 135 கோடி ஒதுக்கீடு

- இலவச கலப்பின கறவை மாடுகள் வழங்க ரூ. 56 கோடி

- மீனவர்கள் புதிய விசைப் படகுகள் வாங்க மானியத்துடன் நிதியுதவி

- ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி-திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ. 25 கோடி ஒதுக்கீடு

- கடலோர நகரங்களில் 13 மீன் பதப்படுத்தும் மையங்கள்

- மீனவர்களுக்கு மீன்பிடி அல்லாத காலங்களில் ரூ. 4000 சிறப்பு உதவித் தொகை

- நாகை, பழையாறில் நவீன மீன்பிடி துறைமுகங்கள்

- அணைகள் புனரமைப்புக்கு ரூ. 745 கோடி ஒதுக்கீடு

- ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்க ரூ. 4500 கோடி ஒதுக்கீடு

- ரூ. 367 கோடியில் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு

- சமையல் காஸ் சிலிண்டர்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி ரத்து

- தனியார் நிலங்களில் ரூ. 43 கோடியில் 3 கோடி மரங்கள் வளர்ப்பு

- அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்

- பல உறுப்பினர் வார்டுகள் ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றம்

- நடப்பாண்டில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

- புதிய நில எடுப்புக் கொள்கை உருவாக்கப்படும்.

- முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைப்பு

- குறு சிறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 3% வட்டியில் தள்ளுபடியில் கடன்

- மென்பொருள்,வன்பொருள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை

- விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்

No comments:

Post a Comment