Thursday 4 August 2011

சிரியாவிலிருந்து தூதரை திரும்ப பெற்றது இத்தாலி

ரோம் : சிரியா தலைநகரில் பணியாற்றி வந்த இத்தாலி தூதரை நாட்டிற்கு திரும்புமாறு இத்தாலி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ளது இத்தாலி.

இதன் காரணமாக சிரியா தலைநகரில் பணியாற்றி வந்த இத்தாலி தூதரை நாட்டிற்கு திரும்புமாறு இத்தாலி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிரியாவுடனான உறவை துண்டிப்பதில் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளில் இடம் பெற்றுள்ள இத்தாலி இத்தகைய நடவடிக்கையை முதன்முதலாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment