Wednesday 2 November 2011

கோயில் இடம் யாருக்கு?:வழக்கில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு Yesterday at 7:05 pm

இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் கோர் பாத்ரி என்ற இடத்தில் பழமையான ஹிந்துக்கோயில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 160 வருட பழமையான கோரக்நாத் கோயில்தான்
பெஷாவர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது.

பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களின் முக்கிய கோயில்தான் கோரக்நாத். கோயில் பூஜாரியின் மகள் தொடர்ந்த வழக்கில் பெஷாவர் உயர்நீதிமன்றம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது. உரிமை தகராறு தொடர்பாக நீண்டகாலமாக கோயில் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது.

No comments:

Post a Comment