Thursday 29 September 2011

பலஸ்தீன்: ஓபாமா அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?


பலஸ்தீன அப்பாஸ் நிர்வாகம் ஐ.நா. பொதுச்சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் தேதி கோரியுள்ளது. அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளின் கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது.

ஐ.நா வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது என்றாலும் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க அப்பாஸ் நிர்வாகம் கெஞ்சி கொண்டிருகின்றது. ஆனால் அமெரிக்கா அந்த முயற்சியை நிராகரித்தும் அவ்வாறான எல்லை மற்றும் தனி நாட்டுக்கான அங்கீகாரம் பேச்சின் ஊடாக இஸ்ரேல்தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஐ.நா. அதை வழங்க கூடாது வழங்க முற்பட்டால் வீட்டோவை பயன்படுத்துவேன் என்று அமெரிக்கா தெரிவித்துவருகின்றது.

பலஸ்தீன் சுதந்திர நாடு என்பதை எவரிடமும் மண்டியிட்டு கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஹமாஸ் தனது நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் உறுதியாகவுள்ளது. இது அப்பாஸின் தனிப்பட்ட முயற்சி பலஸ்தீனர்களின் தேசிய தீர்மானங்கள் அதில் உள்வாங்கப்படவில்லை இடையில் நின்று விட்ட பலஸ்தீன்- இஸ்ரேல் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க தேவையான முயற்சி மட்டும்தான் இது என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக ஸ்தம்பித்து போயுள்ள பலஸ்தீன் – இஸ்ரேல்  சமாதானப் பேச்சு வார்த்தையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேலையில் இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சு புதிதாக 1100 யூத குடியிருப்பு தொகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலத்தில் நிர்மாகிக்கப் போவதாக நேற்று 28.09.2011 அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் அடாவடிதனங்களை கண்டுகொள்ளதா அமெரிக்காவும் , பிரிட்டனும் பலஸ்தீனர்கள் கையை கட்டிகொண்டு பேச்சு மேசைக்கு போகவேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது இந்த நியாயமற்ற அழுத்தங்களுக்கு ஹமாஸ் போன்ற போராட்ட அமைப்புகள் உடன்படாவிட்டாலும் அப்பாஸ் தலைமயிலான PLO நிர்வாகம் உடன்பட்டு போவது கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சின் 1100 யூத குடியிருப்பு தொகுதிகள் தொடர்பான அறிவிப்பை சமாளிக்கும் முகமாக அமெரிக்காவின் வெளிநாட்டு செயலளர் ஹிலாரி கிளின்டன் இந்த குடியிருப்பு நிர்மான திட்டம் நேரடி பேச்சுக்கான தமது முயற்சிக்கு எதிர் விளைவை தருவதாக தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகள் சில தமது செல்லப் பிள்ளையை கண்டிப்பது போன்று கண்டித்துள்ளது.

அதேவேளை ஹமாஸ் இன்று 28.09.2011 வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியேற்றங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும்  நிலையில் பேச்சு என்பது பயனற்றது இஸ்ரேல் பலப்பிரயோகம்  என்ற மொழியைமட்டும்தான் விளங்கிக்கொள்ளும் என்று  தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜெருசலம் பலஸ்தீனர்களின் தலைநகரம் என்று பலதீனர்கள் கோரிவருகின்றனர். அதேவேளை இஸ்ரேல் ஜெருசலம் முழுவதும் தனது தலைநகரம் என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யமுடியாது என்று உறுதியாக தெரிவித்து வருகின்றது. கிழக்கு ஜெருசலத்தில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றுவதும் அவர்களின் குடியிருப்புகளை தகர்த்து அந்த இடங்களில் யூத குடியுருப்புகளை நிர்மாணிப்பதுமாக ஆக்கிரமிப்பு வேட்டையில் உள்ளது இஸ்ரேல்.

மேற்கு கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என்று பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இஸ்ரேல் அது ஒருபோதும் முடியாத விடையம் என்று உறுதியாக கூறுகின்றது. மேற்கு கரை பகுதியில் புதிய இராணுவ குடியிருப்புகளையும் உருவாக்கி தொடர்ந்து நிர்மாணித்து வருகின்றது. மறுபுறத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் பேசுங்கள் என்ற அழுத்தத்தை அப்பாஸ் நிர்வாகத்துக்கு கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் தொடரபோகும் பேச்சு எந்த பலனை தரபோகின்றது என்பது விடைதெரிந்த கேள்வி.

அப்பாஸ் நிர்வாகமும் இஸ்ரேலும் பலஸ்தீனர்களை ஏமாற்றி பலஸ்தீனர்களின் பல நிலங்களை இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்கும் வாக்குறுதிகளை வழங்கியதுடன் பலஸ்தீன போராளிகள் பலரையும் இஸ்ரேலுக்கு காட்டி கொடுக்கும் வேலையையும் செய்தமை அல் ஜசீரா ஆதாரங்களுடன் வெளிபடுத்தியிருந்தது என்பது குறிபிடத்தக்கது.

கடந்த திங்கள் கிழமை 26.09.2011 இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ் கருத்துரைகையில் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்தான் இஸ்ரேல் பேச்சு வார்த்தை செய்வதற்கு மிக சிறந்த தலைவர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஏற்படபோகும் பேச்சு பலஸ்தீனர்களுக்கு பயன் உள்ளதாக அமையாது என்பதைத்தான் நிகழ்வுகள் காட்டுகின்றது .ஆரம்பிக்க போகும் பேச்சு இதுவரை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டு வரும் எந்த நடவடிக்கையையும் பாதிக்காது அவைகள் தொடர்ந்தும் இடம்பெறும். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு கிழக்கு ஜெருசலத்தில் மேற்கொண்டு வரும் எந்த அகழ்வு நடவடிக்கைகளையும் பாதிக்காது என்பதுடன் பேச்சு எந்த வகையிலும் சட்டவிரோத ஜெருசலத்தின் நில அகழ்வையும் தடுத்து நிறுத்தாது என்பது குறிபிடதக்கது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலம் பிரதேசத்துக்கு கீழாக கடந்த 40 ஆண்டுகளாக பலஸ்தீனர்களின் குடியிருப்புக்கள் , மஸ்ஜிதுகள் போன்ற வற்றை கீழால் ஊடறுத்து நிலத்தை அகழ்ந்து குடைந்து வருகின்றது. ஜெருசலத்தில் இதுவரை அகழப்பட்டுள்ள சுரங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு பாரிய சுரங்க வலையமைப்பை துறக்கவும் வேலைகள் செய்துவருகின்றது .

இந்த சட்டவிரோத நில அகழ்வு மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இந்த அகழ்வினால் மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில் ஆபத்தான நில வெடிப்புகளும் குழிகளும் தோன்றி வருகின்றது. தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு மஸ்ஜிதுல் அக்ஸாவின் அருகிலும் 65 மற்றும் 22 மீட்டர் அகலம் கொண்ட இரு நிலச் சுரங்க வழிகளை ஏற்கனவே அகழ்ந்துள்ளது. அதற்கு மேலதிகமாக பல இடங்களில் மறைமுகமாக அகழ்ந்து வருகின்றது. இவற்றை தொடங்கபோகும் அந்த பேச்சால் இடைநிறுத்தக் கூட முடியாது என்பது குறிபிடத்தக்கது. அப்படியான எந்த நிபந்தனைக்கும் இஸ்ரேல் உடன்படாது என்பதுடன் அமெரிக்கா அத்தகைய நிபந்தனைகளை ஏற்றுகொள்ளாது என்பது இஸ்ரேல் பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் சொல்லும் வரலாற்று செய்தி.



பலஸ்தீன அப்பாஸ் தலைமையிலான அரசாங்க அதிகாரிகள் இஸ்ரேலுடன் பலஸ்தீன மக்களுக்கு துரோகமிழைக்கும் வகையிலான பலஸ்தீன மக்கள் உரிமைகளை விற்பனை செய்யும் விதமாக கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் முன்னால் வெளிவிவகார செயலாளர் கோண்டோலீசா ரைஸ், இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சர் லிவ்னி, பலஸ்தீன் முன்னால் பிரதமர் அஹ்மத் குரெய், பலஸ்தீன் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் சாயிப் எறேகட் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் PA_PLO அதிகாரிகள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளில் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க முன்வந்துள்ளனர் என்ற நம்பகமான இரகசிய தகவல்கள் வெளியானமை குறிபிடத்தக்கது.

இந்த செய்திகள் ஏன் அமெரிக்காவும் பிரிட்டனும் அப்பாஸ் நிர்வாகத்துடன் இஸ்ரேல் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதேவேளை கடந்த திங்கள் கிழமை 26.09.2011 இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்தான் இஸ்ரேல் பேச்சு வார்த்தை செய்வதற்கு மிக சிறந்த தலைவர் என்றும் அவரை தனது நண்பர் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது .

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இருபு அரணாக-ironclad- வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்து தனது முழு விசுவாசத்தை இஸ்ரேலுக்கு காட்டினார்.

இப்படி உரையாற்ற சில தினங்களுக்கு முன்னர் ஒபாமா இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்லவேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இஸ்ரேலிய அரசியல் அழுத்த குழுவின் முன்னாள் அவரின் சொந்த கருத்தில்  சில தினங்கள் கூட அவரால் இருக்க முடியவில்லை . இஸ்ரேலினால் வழிநடத்தப்படும் அரசியல் அழுத்த குழுவின் ஆளுமைக்கு உட்பட்டு தனது இஸ்ரேல் பக்கசார்பு விசுவாசத்தை AIPACயில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன விளைவு தனது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய யூதர்களின் அவையில் மீண்டும் ஒபாமா தனது இஸ்ரேல் விசுவாசத்தை நிரூபித்தார் என்பது குறிபிடதகக்து. தவறியிருந்தால் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி இன்றி தவிக்க ஏன் தோல்வி காண நேரிடும் என்பது ஒபாமாவுக்கு தெரிந்த விடயம்.

இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை அமெரிக்காவும் , இஸ்ரேலும் உருவாக்கியது தற்போது அமெரிக்காவை இஸ்ரேல்தான் நிர்வகித்து வருகின்றது என்பதைத்தான் மேகண்ட சம்பவம் எடுத்து காட்டுகின்றது. அமெரிக்காவில் வெளிவரும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யமான நியூ யோர்க் சஞ்சிகை Obama: America’s ‘first Jewish president’? ஓபாமா அமெரிக்காவின்    முதல் யூத ஜனாதிபதியா ? என்ற தலைமயில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளது அந்த கட்டுரையை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவுக்கு பிரதான நிதி வசூலிப்பவரான John Heilemann என்பவர் எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் அமெரிக்க ஜனாதிபதிகளில் இஸ்ரேலுக்கு கடும் போக்கு ஆதரவாளரான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை விஞ்சிவிட்டார் ஒபாமா என்று தெரிவித்துள்ளார் .

அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்க படவேண்டும் அதேவேளை இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம் தொடரவேண்டும் என்ற உறுதியானதும் பொருத்தமானதுமான நிலைப்பாட்டிலும் செல்பாட்டிலும் ஹமாஸ் தொடந்து உறுதியா இயங்கிவருகின்றது. இரகசிய விட்டுகொடுப்புகளுக்கு உடன்படுவது பலஸ்தீனர்களுக்கு மட்டும் செய்யும் துரோகம் அல்ல முழு முஸ்லிம் உம்மாவுக்கும் செய்யும் துரோகம் என்று ஹமாஸ் நம்புகின்றது.

எல்லா ஒடுக்கு முறைகளையும் துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு  வரும் குண்டுகளினால் அடக்கி விடலாம் என்பதும். எல்லா அடக்கு முறைகளையும் வட்டமேசைப்  பேச்சுக்களினால் வென்றுவிடலாம்  என்பதும்  இஸ்லாமிய சிந்தனையல்ல.




No comments:

Post a Comment