Thursday 29 September 2011

ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம்: பாலஸ்தீனத்தில் சிறுவன் படுகொலை

யூத ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாலஸ்தீன சிறுவன் மரணமடைந்துள்ளான்.
யூத ஆக்கிரமிப்பாளர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த எட்டு வயது பாலஸ்தீன் சிறுவன் ஃபரீட் ஜாபர் மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளான்.

மேற்குக் கரை நகரான அல் கலீலில் தெருவோரமாய்ச் சென்று கொண்டிருந்த போது யூத ஆக்கிரமிப்பாளர் தனது வாகனத்தால் சிறுவனை மோதிவிட்டு சென்றனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன் ஜாபரை அருகில் இருந்தவர்கள் கிர்யத் அர்பா மருத்துவமனையில் சேர்த்தனர்.
மிக மோசமான காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஜாபர், அவசர சிகிச்சைக்காக ஹதாஸ்ஸா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான்.
பாலஸ்தீன் மேற்குக்கரை பிராந்தியத்தில் சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீன பொது மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment