Friday 29 July 2011

நாளை குரூப் 2 தேர்வு : தேர்வர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை

தருமபுரி, ஜூலை 28: குரூப்-2 தேர்வுக்கான மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆர். லில்லி கூறியது: 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வை மாவட்டத்தில் 40 மையங்களில் 17,026 பேர் வரும் 30-ம் தேதி எழுதுகின்றன.  ÷தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து வரக் கூடாது. 

மையங்களுக்கு செல்போன்கள் கொண்டுவரப்பட்டால் அவை, நுழைவு வாயிலிலேயே பறிமுதல் செய்யப்படும். தேர்வர்கள் எந்தவிதமான முறைகேடான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment