Friday 29 July 2011

உக்ரேய்ன் சுரங்க விபத்து : 16 பேர் பலி

உக்ரேயினில் நேற்றிரவு இடம்பெற்ற சுரங்க் விபத்தில் 16 பேர் பலியாகினர். கிழக்கு லுகான்ஸ்க் மாநிலத்தில், இவ்வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
 இவ்விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.


எனினும் இவ்வெடிவிபத்தில் சிக்கிய 10 ற்கு மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை எனவும், இருவர் காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேய்ன் நாட்டின் நிலக்கரி சுரங்கங்கள், பணிபுரிவதற்கு உலகின் மிக ஆபத்தான சுரங்கங்களாக கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment