Thursday 9 June 2011

கோலான்குன்றுகளை மீட்போம்-இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை


டமாஸ்கஸ்:இஸ்ரேலின் எல்லை பகுதியில் ராணுவ அணிவகுப்பு நடத்துவது தொடரும்.இஸ்ரேல் அபகரித்த கோலன் குன்றுகளின் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்பிவருவார்கள் என சிரியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1967-ஆம் ஆண்டு நடந்த போரின் நினைவுதினத்தில் கோலான் குன்றுக்கு வந்த ஃபலஸ்தீன், சிரியா குடிமக்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த போரில்தான் இஸ்ரேல் சிரியாவிற்கு சொந்தமான கோலான் குன்றுகளை அபகரித்தது. 



ராணுவ அணிவகுப்பு துவக்கம் மட்டுமே.இழந்துபோன நிலங்களை மீட்க சிரியா, ஃபலஸ்தீன் மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என சிரியா நாட்டு அரசு பத்திரிகையான திஷ்ரீன் கூறியுள்ளது. விரட்டியடிக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான 6 லட்சம் சிரியா நாட்டு மக்கள் தங்களது கிராமங்களுக்கும், விவசாயநிலங்களுக்கும் திரும்பி வருவதை குறித்து இஸ்ரெல் ஆச்சரியப்பட தேவையில்லை. எந்த நேரத்திலும் இஸ்ரேல் இதனை எதிர்பார்க்கலாம் என அப்பத்திரிகை கூறுகிறது.



No comments:

Post a Comment