Thursday 9 June 2011

திருவாரூர் கலெக்டராக முனியநாதன் பொறுப்பேற்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கலெக்டராக முனியநாதன் நேற்று பொறுப்பேற்றார்.திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். 


நாகை மாவட்ட மாவட்ட கலெக்டராக இருந்த முனியநாதன் திருவாரூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற கலெக்டர் முனியநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் விவசாயம் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றபாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., தங்கவேல் உடனிருந்தார்

No comments:

Post a Comment