Wednesday 1 June 2011

காஷ்மீர்-போலிஸ் மிரட்டலால் கல்லூரி மாணவி பலி...


ஜம்மு:ஜம்மு காஷ்மீர் தோதா மாவட்டம் புள் தோதா நகரத்தை சேர்ந்த மாணவி கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடன் கல்லூரியில் பயிலும் மாணவனுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்ததற்க்காக போலிஸ் மிரட்டியதால் செனாப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரஷிதா பானு தன்னுடன் கல்லூரியில் பயிலும் நஜப்தினுடன் புள் தோதா நகரத்தில் செனாப் ஆற்றின் அருகில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சில காவலர்கள் நஜப்தினை தாக்கியதோடு மட்டுமல்லாமல் பானுவிடம் அந்த பகுதி முழுவதும் அவர்கள் இருவரை குறித்தும் பரப்புரை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

அவமானம் தாங்க முடியாமல் பானு அருகில் இருந்த செனாப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இருபது வயதையுடைய அவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இது மாநில காவல்துறையின் அராஜகம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதாகவும் மூத்த அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment