Thursday 2 June 2011

ஹலால் பீர் அருந்துவதற்கு தடை


படாங் செராய்:மலேசியாவில் தற்போது விற்பனையாகும் ஹலால் பீரை முஸ்லீம் மக்கள் அருந்துவதை உடன் நிறுத்துமாறு மலேசிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பானம், “ஹலால் முறைப்படி தயாரிக்கப்பட்ட பீர்” என்ற விளம்பரத்துடன் அங்கு விற்பனையாகின்றது.

தேசிய பத்வா குழுவின்படி உணவிலும் பாணத்திலும் அனுமதித்துள்ள ஆல்கஹால் அளவை விட அதிக சதவிகிதம் இருக்கிறது என்று மலேசிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் இலாகாக்களை கவனிக்கும் அமைச்சர் டேடுக் ஜமீல் பகாரம், ஹலால் பீர் பற்றிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனம், இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. ஆனால் மலேசியாவில் விற்பனையாகும் ஹலால் பீரை பரிசோதனக்கு உட்படுத்திய போது, அதில் 0.5% ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தி இலாகா (ஜேக்கிம்), மிக விரைவில் மலேசியாவில் விற்பனையாகும் ஹலால் பீரைத் தடை செய்யவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment