Wednesday 15 June 2011

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் யார்?

வாஷிங்டன், ஜூன் 15: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் நான் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டேன் என டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.



மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதில் டேவிட் ஹெட்லி கூறியதாவது, "லஷ்கர் அமைப்பின் முகாமில் கலந்து கொண்டேன் குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.


குஜராத்தில் தீவிரவாதி மோடி நடத்திய இனப்படுகொலை விடியோ காட்சிகளை பார்த்தேன், அதில் ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் கட்சிகளையும், முஸ்லிம் பெண்களை கற்பழித்து அதை வீடியோ எடுத்ததையும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து தீயில் போட்டு கொல்லும் காட்சியையும் பார்த்தேன்.


குஜராத்தில் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் முஸ்லிம்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப்படுகொலையை நடத்தின அதற்க்கு இந்திய அரசும், நீதி துறையும் சரியான நீதி வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் இந்தியாவுக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினேன். அதன் விளைவாகவே இந்த தாக்குதலை நடத்த ஒத்துழைத்தேன் என்று தெரிவித்தார்.


தீவிரவாத விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் பார்த்தேன் அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் ஹிந்து பயங்கரவாதி பாபா பஜ்ரங்கி கூறுகிறார். பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் பார்த்தேன். இதுவே நான் இந்தியாவுக்கு எதிராக செயல்பட காரணமாக அமைந்தது.

No comments:

Post a Comment