Monday 26 September 2011

சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை - மன்னர் அப்துல்லா உத்தரவு

Saudi Womenசவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் போட்டியிடவும், ஓட்டு போடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


அதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா(87) நேற்று அறிவித்தார். அப்போது அடுத்து நடைபெற உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில்(ஷீரா) பெண்களையும் பங்குபெற செய்ய முடிவு செய்துள்ளோம் என அறிவித்தார்.
சவுதி அரேபியாவில் வருகிற 29ந் தேதி 285 நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. அதில் 5 ஆயிரம் ஆண்கள் போட்டியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தலில் பெண்களும் பங்கேற்க முடியும். தேர்தலில் அவர்களும் போட்டியிடலாம். ஓட்டு போடலாம்.
உரிமைகளுக்காக கடந்த சில மாதங்களாக முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அந்த நிலை இங்கும் ஏற்படக்கூடாது என கருதி அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து சவுதி அரேபிய மன்னர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததாக தெரிகிறது.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போது அங்கு பெண்கள் கார் ஓட்டி வருகின்றனர். இதேநிலை மற்ற விஷயங்களிலும் ஏற்பட்டு விடக்கூடாது என அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment