Friday 9 September 2011

டெல்லி குண்டு வெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது

டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே இன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.


இந்த ஈனத்தனமான செயலுக்கு காரணமான, அதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை விரைவில் பிடிக்க மத்திய மாநில அரசாங்கங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதம் தேசத்தின் தலைநகரையும் விட்டுவைக்கவில்லை என்பதை இந்த புதிய சம்பவம் எடுத்து காட்டுகிறது.

குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டுவரும் தீவிரவாத தலைமையை உளவுத்துறையினரும் காவல்துறையும் சரியாக இனம்கண்டு அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். யூகங்களை பரப்புவதை விட்டும் ஊடகங்கள் தவிர்ந்துகொள்ள வேண்டும் அது புலனாய்வின் போக்கை தவறாக வழிநடத்தி அப்பாவிகள் பாதிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் .

எனவே இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக தேசமே ஓரணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், வகுப்புவாத காழ்புணர்ச்சிக்கு ஒருபோதும் வாய்பளித்துவிடக் கூடாது.

பாப்புலர் பிராண்டின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்து காயமடைந்த உயிர்பிழைத்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்

இ எம் அப்துர் ரஹ்மான்
சேர்மன்
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா

No comments:

Post a Comment