Saturday 4 June 2011

தாராசிங் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகையில் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் பெயர்

ஜெய்ப்பூர்: தாராசிங் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் மூத்த பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர ராத்தோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் வசுந்தர ராஜே அமைச்சரவையில் பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவி வகித்தார்.



ஜெய்ப்பூரில் சாராய மாஃபியா கும்பலைச்சார்ந்த குண்டரான தாராசிங் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். பின்னர் தாராசிங்கின் உறவினர்கள் என்கவுண்டர் போலியானது

என புகார் அளித்தனர்.உறவினர்களின் கோரிக்கையை ஏற்று 2010 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சி.பி.ஐ யிடம் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு போலீஸ்காரர்களை சி.பி.ஐ

முன்னர் கைதுச்செய்திருந்தது.

No comments:

Post a Comment