Friday 21 June 2013

SDPI கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா: முத்துப்பேட்டையில் 5 இடத்தில் கொடியேற்றம்!

SDPI கட்சி 2009 ஜூன் 21 ஆம் தேதி துவங்கப்பட்டது. இன்றுடன் 4 வருடம் நிறைவு பெறுகிறது. ஜூன் 21 ஆம் தேதி 5 ஆம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை “கட்சி துவக்க தினமாக”- கட்சி கொண்டாடி வருகிறது.

அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் கொடியேற்று விழா மற்றும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதனடிப்படையில் முத்துப்பேட்டையில் ஐந்து இடத்தில் கொடியேற்று விழா எழுச்சியோடு நடைபெற்றது. SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துல் லத்திப் மற்றும் செயலாளர்  நைனா முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு கொடியினை ஏற்றிவைத்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் செயல்வீரர்களுக்கும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், 10 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் சேவை பணிகள் தமிழகம் முழுவதும்  நடைபெறும்.






















தகவல் மற்றும் புகைப்படம் : அஹம்மத் கபீர் 


No comments:

Post a Comment