Tuesday 14 May 2013

பதவி ஏற்பு விழாவுக்கு மன்மோகன் சிங் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்! : நவாஸ் ஷெரிப்!


பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரிப் பிரதமர் பதவி ஏற்கிறார்.இந்நிலையில் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று கூறியதாவது:
பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்போம். அவர் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். என்னுடன் அவர் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினார். தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறினார்.இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். பதவி ஏற்பு விழாவுக்கு அவர் வராவிட்டாலும், விரைவில் அவர் பாகிஸ்தான் வருவார் என எதிர்பார்க்கிறேன் என்றார் ஷெரிப்.

No comments:

Post a Comment