Tuesday 27 September 2011

புதுப்பட்டினத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்திற்கும் மல்லிபட்டினத்திற்கும் இடையே உள்ள கடற்கரையோர கிராமமான புதுப்பட்டினத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் மீது நேற்று முந்தினம் கொடூர தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.



ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சந்திரவேல், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான வன்முறை கும்பல் முதலில் புதுப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் மீது தாக்குதலை தொடுத்து பள்ளிவாசலை சேதப்படுத்தியதோடு நான்கு வீடுகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கியுள்ளது, மேலும் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமைய மக்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த சேதுபாவா சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் இத்தாக்குதலை வேடிக்கைப் பார்த்ததோடு இரண்டு மணி நேரத்திற்கு பின்பே காவலர்களை வரவலைத்துள்ளார். மேலும் புதுப்பட்டினம் இஸ்லாமியர் வாழக்கூடியப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு மக்கள் கடுமையாக அச்சுருத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். இத்தோடு மக்களை பார்க்கசென்ற பல்வேறூ இஸ்லாமியத் தலைவர்களையும் வழக்கறிஞர் குழுவையும் சந்திக்கவிடாமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தொடரும் வன்முறை வெறியாட்டம்

கடந்த நான்கு மாதங்களில் இது மூன்றாவது தாக்குதலாகும். சாதாரணமாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த மக்களிடையே ஆர்எஸ்.எஸ் நுழைந்து கோயிலை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் சாகா நடத்துவது, மத விரோதத்தை தூண்டுவது என திட்டமிட்ட நடவடிக்கைகளின் வழியாக இந்துத்துவ பயங்கர வன்முறையை அப்பகுதியில் தொடங்கியிருக்கிறது.

ஏற்கனவே முத்துப்பேட்டை பகுதியை கலவரப்பகுதியாக மாற்றிவிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தற்போது புதுப்பட்டினத்தையும் அவ்வாறு மாற்ற முயற்சித்து வருகிறது. தமிழகர்களாகிய நாம் இந்துத்துவ பயங்கரவாத சக்திகளை வேரறுப்பதற்கு இஸ்லாமிய தமிழர்கள் பக்கம் துணைநிற்போம்.

by அருண்ஷோரி Arunshori Pandarinathan

No comments:

Post a Comment