Friday 5 August 2011

மும்பை துறைமுகத்திற்கு அருகில் கடலில் மூழ்கிய எரிபொருள் கப்பல் - 30 பணியாளர்கள் உடன் மீட்பு

இந்தோனேசியாவில் இருந்து, மும்பை துறைமுகம் வந்துகொண்டிருந்த பனாமா நாட்டு கப்பல், மும்பை துறைமுகத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த

 போது விபத்துக்குள்ளானது. கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாலும் கப்பலில் நீர் புகுந்ததாலும் 60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் கடலுக்குள் மூழ்க தொடங்கியது.


உடனடியாக குறித்த பகுதிக்கு கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு படகுகள் மூலம் விரைந்து சென்று கப்பலில் இருந்த 30 ஊழியர்களை பத்திராக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்டான், இந்தோனேஷியா, பலஸ்தீனியா, ருமேனியா நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் இதிலிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment