Tuesday 26 July 2011

ஏவுகணைகள் உருவாக்கும் பாகிஸ்தான் - ஜெட் விமானங்கள் தயாரிக்கும் இந்தியா

24 புதிய ஏவுகணைகளை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதன் படி அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரிக்கவுள்ளது இந்த ஆண்டாகத்தான் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


தற்போது பாகிஸ்தான் தயாரிக்கும் ஏவுகணைகள், 700 கி.மீட்டரிலிருந்து 1000 கி.மீ வரையிலான தூரம் வரை சென்று எதிரியின் இலக்குகளை தாக்க கூடியது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களையும் தாக்க கூடிய திறன் அவற்றிற்கு இருக்கும் என நம்பப்படுகிறது...


 இதேவேளை இந்திய விமானப்படை, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான 189 ஜெட் விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் 18 ஜெட் விமானங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படுவதுடன், 108 ஜெட் விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் நிறுவனத்தில் உருவாக்கப்பட இருப்பதாகவும், மொத்தம் 121 ஜெட் விமானங்களே இத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற இருப்பதாகவும், இது 2016-2017 இல் பூர்த்தியாகும் எனவும், இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment