Thursday 19 May 2011


இஸ்லாத்தை அறிவோம் - பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் பயிற்சி முகாம்


காரைக்கால்: இன்றைய முஸ்லிம் சமூகத்தில் சீர்கேடுகள் மிகைத்து கிடக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் இஸ்லாம் சம்பந்தமான பயிற்சி முகாம்களை நடத்த இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக வருகின்ற 22.05.2011 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 4.30மணி அளவில் ஷமீரா மஹால், காமராஜர் சாலை, காரைக்காலில் "இஸ்லாத்தை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு முழுமையான இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற இருக்கின்றது.

இந்த பயிற்ச்சி முகாமில் கீழ் கண்ட முக்கிய விஷயங்களைப்பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கின்றன.

1. இஸ்லாம் காட்டித்தந்த முழுமையான வாழ்வியல் நெறியை நாம் எப்படி கடைபிடிப்பது?

2. இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை எப்படி அகற்றுவது?

3. ஒரு முழுமையான இஸ்லாமிய குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது?

4. தனி மனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம் போன்ற நல்ல தலைப்புகளில் இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

ஆகவே ஆண்களும், பெண்களும், பெருதிரளாக கலந்து கொண்டு சமூகத்தின் மாற்றத்திற்காக இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காரைக்கால் மாவட்டம்.
பெண்களுக்கு தனி இடவசதி செய்துதரப்பட இருக்கின்றது.

அன்போடு அழைக்கிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
காரைக்கால் மாவட்டம்,  தொடர்புக்கு:  99949 46364



நன்றி : ஹார்பார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளை....

No comments:

Post a Comment