Thursday 19 May 2011

சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன சிறுமி தமன்னா மீட்பு (அல்ஹம்துலில்லாஹ்)

சென்னை, மே.19-  
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சையது நூர் முகமது. இவர் அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்து உள்ளார். இவருடைய மனைவி ஹசீனா. இவர்களுக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகள் தமன்னா, ரிகாத் உள்ளனர். கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹசீனா மெரினா கடற்கரைக்கு சென்றார். அப்போது சிறுமி தமன்னா கடற்கரை கூட்டத்தில் மாயமாகி விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமி தமன்னா இன்று மீட்கப்பட்டார். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment