Wednesday 18 May 2011

50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கிடு வழங்கியது ஜாமியா மில்லியா

Jamia_Millia_Islamia
புதுடில்லி:சிறுபான்மையின கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் (JMI) நிர்வாகம்,வருகிற கல்வியாண்டு முதல் 50 சதவிகிதம் இடஒதுக்கிட்டை அனைத்து துறையிலும் இடஒதுக்கிடு வழங்க முடிவு செய்துள்ளது.
 இந்தியவிலேயே ஒரே சிறுபான்மை கல்வி நிறுவனமான ஜாமியா உள் இடஒதுக்கிடாக 10 சதவிகிதம் முஸ்லிம் பென்களுக்கும்,10 சதவிகிதம் முஸ்லிம் ஒ.பி.சி மற்றும் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
 பல்கலைகழகம் அனுப்பிய சுற்றறிகையில் 42 சதவிகிதம் பொதுவாகவும் மீதி 3 சதவிகிதம் உடல் ஊனமுற்றோருக்கும் வழங்கும். இதற்கு முன்னதாக 25 சதவிகிதம் ஜாமியா பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கொடுத்து கொண்டுள்ளதை தற்போது அதை 5 சதவிகிதமாக குறைத்துள்ளது.மேலும் 5 வருடம் அப்ப்ள்ளியிலேயே படித்து இருக்க வேண்டும்.
 ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்கள்,www.jamia.ac.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்து அவர்களுடைய பிரிவை நிரப்பி மறுபடியும் கொடுக்க வேண்டும் என பல்கலைகழக செய்தி தொடர்பாளார் தெரிவித்தார்.
 பிப் 22 சிறுபான்மை கல்வி நிறுவனம் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சிறுபான்மை பல்கலைகழகமாக அங்கீகரித்ததும் இவ் இடஒதுக்கிடு அமல் படுத்தபடுகிறது.

No comments:

Post a Comment