Saturday 5 October 2013

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!

"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்திவருகிறது. தொடர் பிரச்சாரத்தின் நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.


இதற்கான தெருமுனை பிரச்சாரம் நேற்று (04-10-2013) முத்துப்பேட்டையில் பெரியகடைத் தெரு, பேரூராட்சி அலுவலகம் முன்பு, மற்றும் ஆசாத் நகர் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. இதில்  பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் மற்றும் ஷேக் அஜ்மல் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment