Monday 6 June 2011

கைதுச் செய்து பார் என சவால்விட்ட ராம்தேவ் பெண்வேடத்தில் தப்ப முயன்றார்...


புதுடெல்லி:எனக்கு மரணத்திற்கு கூட பயமில்லை. என்னை கைது செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் உண்டா? என சவால் விட்டவாறு ஹைடெக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு போலீஸார் சுற்றி வளைத்தவுடன் கைதுக்கு பயந்து பெண் வேடத்தில் தப்ப முயன்றார்.

நேற்று அதிகாலை ராம்லீலா மைதானத்தில் பல்வேறு நகைச்சுவையான நாடக காட்சிகள் அரங்கேறின. பெரும் போலீஸ் படையுடன் ராம் லீலா மைதானத்தை போலீசார் சுற்றி வளைத்தவுடன் அதுவரை சவடால் விட்ட ராம்தேவ் போலீஸின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மக்கள் கூட்டத்தில் ஓடி மறைந்தார். ஒரு மணிநேர தேடலுக்கு பிறகு பெண் வேடமிட்ட ராம்தேவை பெண்கள் பகுதியிலிருந்து போலீசார் பிடித்தனர்.


போலீசார் அருகில் வந்ததும் ஐந்து நிமிட அவகாசம் கேட்ட ராம்தேவ் மைக்ரோஃபோன் மூலமாக தனது ஆதரவாளர்களை அழைத்து மூன்று மீட்டர் உயரம் கொண்ட மேடையிலிருந்து துள்ளி குதித்து மக்கள் கூட்டத்தில் மாயமானார். பின்னர் போலீசார் ஒரு மணிநேரம் தேடி அவரை பெண்கள் பகுதியிலிருந்து கைது செய்தனர். பெண் ஆதரவாளர் ஒருவரின் துப்பட்டாவை சுற்றியவாறு தாடியை மறைத்துக்கொண்டு இருந்தார் ராம்தேவ்.

யோகாவின் மூலம் ஆத்ம கட்டுப்பாட்டை கடைபிடிக்க போதிக்கும் ராம்தேவ் போலீசாரை கண்டவுடன் அழுது புலம்பி தப்பியோட முயன்றார். தங்களின் பயந்தாங்கொள்ளி யோகா குருவை காப்பாற்ற முயன்ற பெண் ஆதரவாளர்கள் போலீசார் ராம் தேவை கைது செய்யவிடாமல் சிறிது நேரம் சிரமத்தை ஏற்படுத்தினர். கைது செய்யப்பட்ட ராம்தேவ் டேராடூனுக்கு கொண்டு போகப்பட்டார்.

அவருக்கு 15 நாட்கள் டெல்லியில் நுழைய தடை விதித்துள்ளனர். ராம்தேவை ஸஃப்தர் ஜங் விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்கின்றார்கள் என்ற செய்தி பரவியவுடன் அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தின் அருகில் திரண்டனர். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த ராம்தேவை சட்ட-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருதி அரசு இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து டேராடூனுக்கு அழைத்து சென்றது.

எந்த மாநிலத்திற்கு ஒருவரை கொண்டு சென்றால் முன்கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் டேராடூன் அமைந்திருக்கும் உத்தரகாண்ட் மாநில அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் பா.ஜ.க ஆளுவதால் அவர்கள் இச்செய்தியை கசியவிட்டுள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சார்ட்டர் செய்த ஜெட் விமானத்தில் போராட்டம் நடத்த டெல்லிக்கு வந்த ராம்தேவை சிறப்பு பி.எஸ்.எஃப் விமானத்தில் போலீசார் ஹரித்துவாருக்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment