Friday 5 July 2013

முத்துப்பேட்டையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும்,  பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணி அமர்த்த கோரியும், குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யாததை கண்டித்தும், SDPI கட்சி சார்பாக நேற்று (04/07/13) காலை 10.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு S.நிஷார் தலைமை வகித்தார், SDPI கட்சியின் தேசிய பொதுகுழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் பொதுமக்களும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் திரளாக கலந்துகொண்டனர்.


தகவல் : கபீர் 




No comments:

Post a Comment