Monday 27 May 2013

எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு!

முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும்மாநிலத்தில் 7 சதவீதஇடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்திஎஸ்.டி.பி. கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாமே 26 அன்றுபல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூகநீதி மாநாட்டை நடத்தியது.

நேற்று (26.05.2013) காலை 10 மணியளவில் மாநாட்டுத் திடலில் மாவட்ட துணைத்தலைவர் அன்சாரி கொடியேற்றி வைத்தார்மாலை 3 மணியளவில் பல்லாவரம் கிரீன்மஸ்ஜித் அருகில் தொடங்கிய மாநாட்டின் எழுச்சி பேரணியை மாநில செயலாளர்வி.எம்.ரத்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மாநாட்டிற்கு எஸ்.டி.பி. கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முகமது பிலால்தலைமையேற்றார்மாநில செயலாளர் அமீர் ஹம்சா வரவேற்றுப்பேசினார்.வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரசீதுபொதுச்செயலாளர் அப்துல் கரீம்,தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ்பொதுச்செயலாளர் அணீஸ்முஹம்மதுமத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜீம்,பொதுச்செயலாளர் இஸ்மாயீல்திருவள்ளுர் மாவட்ட தலைவர் முஹம்மதுசலீம்பொதுச்செயலாளர் ஃபிர்தவுஸ்காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள்மீரான்,அப்துல் ராஜாமாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது மொய்தீன்யாசர்அரஃபாத்அபுபக்கர்காதர் பாவாஅபுதாஹீர்குத்புதீன்மொய்தீன் ஃபாரூக்பல்லாவரம்அன்சாரிஆலந்தூர் தொகுதி தலைவர் ஷேக் தாவூத்தாம்பரம் தொகுதி தலைவர் சதாம்உசேன்சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் சாதிக்ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி தலைவர்முஹம்மது ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக தலைவர் .எஸ் இஸ்மாயில்தமிழகமுஸ்லீம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா,கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக தலைவர் அமானுல்லா ஆகியோர் வாழ்த்துரைவழங்கினர்.

மேலும் எஸ்.டி.பி. கட்சியின் மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவிதுணைத்தலைவர்எஸ்.எம்.ரபீக் அஹ்மத்மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் கர்நாடகமாநில தலைவர் கே.எச்.அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியின்இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அனைவருக்கும்நன்றி கூறினார்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மாநில தலைவர் : கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி உரை :



சமூகத்தின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர்முஸ்லிம்களின்வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டிய அரசுகள் அதற்கான உறுதியான முயற்சிகளைஎடுக்கவில்லைமத்திய சிறுபான்மை அமைச்சகம் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கும்நிதிகளை மாநிலங்கள் முழுமையாக செலவளிப்பதில்லைஇதற்கு தமிழகமும்விதிவிலக்கல்ல

மத்திய அரசால் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றதுஎன்பது பற்றி தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்வாழ்க்கை தரத்தில்பின்தங்கியுள்ள சமூக மக்களை பிற சமூக மக்களுக்கு இணையாக உயர்த்துவதற்கு இடஒதுக்கீடு இன்றியமையாததுஅதன் மூலமே தலித்துகளும் இதர பிற்படுத்தப்பட்டமக்களும் ஓரளவு முன்னேற முடிந்திருக்கிறதுஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில்தற்போது தலித்கள் பழங்குடியின மக்களை விட கல்விபொருளாதாரம்,வேலைவாய்ப்பில் கீழ் மட்டத்தில் உள்ளனர்

இதை சச்சார் கமிஷன் போன்ற பல்வேறு கமிஷன்கள் வெளிப்படுத்தியுள்ளனஆனால்இதுவரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கதுமத்திய அரசு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்பறிந்துரையின்படி 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும்.இதற்கான ஏதாவது சட்ட ரீதியான தடைகள் இருப்பின் சட்டத்தின் மூலம் இதைநிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் கடந்த தி.மு. அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடுவழங்கியதுஇது போதாது என முஸ்லிம்கள் போராடி வருகின்றனர்கடந்த சட்டசபைதேர்தல் பரப்புரையின் போது தான் மீண்டும் ஆட்சி பொருப்பேற்றால்முஸ்லிம்களுக்குஇட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவேன் என முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதிவழங்கினார்அந்த வாக்குறுதி என்ன ஆனது ? தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எஸ்.டி.பி. கட்சி தேசிய அளவிலானபிரச்சார இயக்கத்தினை நடத்தி வருகின்றது.

இந்தியா முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் கஷ்டடி யில் கொல்லப்படுவதும்அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதும்தொடர்ந்து வருகிறதுதமிழகத்திலும்பெங்களூரு குண்டுவெடிப்பை காரணம் காட்டி கொடூரமான யூ..பி. சட்டத்தின் கீழ்முஸ்லிம் இளைஞர்கள் மோசமாக கைது செய்யப்பட்டுள்ளனர்தமிழக காவல்துறைஎங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையேன கூறி வருவதுகண்டிக்கத்தக்கதுஉண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதேஎஸ்.டி.பி. யின் கோரிக்கைஎனவே இந்த வழக்கினை சி.பி. யிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி உரை நிகழ்த்தினார்.

சமூக நீதிமாநாடு – காஞ்சிபுரம் – தீர்மானங்கள் தீர்மானம் :

1.நமது நாட்டில் முஸ்லிம்கள் கல்விவேலை வாய்ப்புகளில் ஏனைய பிறசமுதாயத்தைவிட மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசின்அதிகாரப்பூர்வ கமிஷன்களான நீதிபதி ராஜிந்தர்சச்சார்மிஸ்ராகமிஷன்களின் அறிக்கைஆகும்மேலும் மிஸ்ரா கமிஷன் கல்விவேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10சதவீதம் உடனடி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்குஅளித்ததுஆனால் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்பஐ மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும்என்று மத்திய அரசினை இம்மாநாடுவலியுறுத்துகிறது.

மேலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்ஆனால்தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.உண்மையில் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கு இடஒதுக்கீடு தேவையெனில் 7சதவீதம் பூரண இடஒதுக்கீடு வழங்குவதே நியாமானதாகும்எனவே தமிழக அரசுமுஸ்லிம்களுக்கு கல்விவேலைவாய்ப்பில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

2.
கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலையானது மிகுந்த சுற்றுப்புற சீர்கேட்டைஏற்படுத்தி வருகிறதுகடல்நீரும் கதிர்வீச்சு மிகுந்ததாக மாறி உள்ளதுமேலும்இதனைமூட வேண்டு என்று ஆயிரக்கணக்கான கிராம மக்கள் போராடி வருகின்றனர்ஆனால்மத்திய மாநில அரசுகள் மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்துஅணுஉலையை இயக்கி வருவது கண்டிக்கத்தக்கதுகண்ணை விற்று ஒளியை வாங்கவேண்டிய அவசியம் இல்லைஎனவே நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை பறித்துசுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்திமனித உயிருக்கு உலை வைக்கும் கல்பாக்கம்அணுமின் நிலையத்தை உடனடியாக இழுத்து மூட இம்மாநாடு மத்திய மாநிலஅரசுகளை கேட்டுக்கொள்கிறது.

3.தமிழக சிறைகளில் 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்சிறைகைதிகளை அவர்களின் வாழ்நிலை கருதிஒரு குற்றவாளிதிருந்த 7வருடசிறைதண்டனை போதுமானது என்றகாந்தியடிகளின் வாக்குக்கு இணங்க 7 வருடம்சிறையில் கழித்த முஸ்லிம் சிறைகைதிகளை கருணை அடிப்படையில் விடுதலைசெய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேலும் SLR என்ற அதி தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள்பாதிப்படைந்து,உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கோவை அபுதாகீர் என்றசிறைவாசியை நீதிமன்றம் பரோல் உத்தரவிட்டும்தமிழக அரசு மேல் முறையீடுசெய்துள்ளதுதமிழக அரசின் இந்த செயல் மனிதாபிமானமற்ற செயல் ஆகும்எனவேகருணை அடிப்படையில் கோவை அபுதாகீர் என்ற சிறைவாசியை உடனடியாகவிடுதலை செய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

4.மீனவர்கள் அதிகமாக கொண்ட மாவட்டங்களில் ஒன்று காஞ்சிபுரம்ஆனால் அன்றாடம்மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும்காரணமின்றி சிறைபிடிக்கப்படுவதும்கண்டிக்கத்தக்கதுமேலும்இலங்கை ராணுவத்தினரால் சட்டவிரோதமாகசிறைப்பிடிக்கப்படும்போதுஅதரனை எதிர்க்கவேண்டிய மத்திய மாநில அரசுகள்,கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதுஎனவே மீனவர்கள் வாழ்வுமேம்படவும்அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திடவும்மத்தியமாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5
மத்திய மாநில அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு யு..பி. என்ற சட்ட விரோதநடவடிக்கைகள் தடுப்பு சட்டம் என்ற அவசர சட்டத்தை அவசர கதியில்நிறைவேற்றியுள்ளதுஇச்சட்டம் தடா , பொடா போன்ற கொடிய கறுப்பு சட்டங்களைவிட மிகவும் ஆபத்தானதும்அடிப்படை உரிமைகளை பாதிக்க கூடிய சட்டமுமாகும்.இச்சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ரௌலட் போன்ற சட்டங்களுக்குஇணையானதுஇச்சட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் காவல்துறை முஸ்லிம்களைவேட்டையாடி வருவது கண்டிக்கத்தக்கது

மேலும்,பொய் வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து இச்சட்டத்தின் கீழ்விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலையும்காவல் துறை நிகழ்த்திவருகிறதுஅரசமைப்புச் சட்டம் இந்திய குடிமகனுக்கு தரும்அடிப்படை உரிமைகளைஎப்போதும் அவனுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமைஎனவேமத்திய அரசு உடனடியாக இந்த கறுப்பு சட்டத்தை வாபஸ் பெற இம்மாநாடுகேட்டுக்கொள்கிறதுஅத்துடன் சமிபத்தில் பெங்களூர் குண்டு வெடிப்பை தொடந்துதமிழக முஸ்லிம் இளைஞர்களை போலியாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுவருகின்றனர் .இதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு.இவ்வழக்கை சி பி வசம் ஒப்படைத்து உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க இம்மாநாடுகோருகிறது.




No comments:

Post a Comment