Wednesday 19 October 2011

குஜராத் இனப்படுகொலை:அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் – எஸ்.ஐ.டி


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் குல்பர்க் ஸொஸைட்டி கூட்டுப் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையை பொருத்தமான மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) அறிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக முன்னர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸிற்கு பதிலளிக்கையில் விசாரணை அதிகாரி ஹிமான்சு சுக்லா சிறப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை அறிக்கையை பொருத்தமான நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எஸ்.ஐ.டிக்கு உத்தரவிடக்கோரி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் எஸ்.ஐ.டிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அளித்த பதிலில்தான் எஸ்.ஐ.டி இவ்வாறு கூறியுள்ளது.


எஸ்.ஐ.டி அளித்த பதிலுக்கு எதிர்ப்பை பதிவுச்செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.எம்.ஓரா நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். இதுத்தொடர்பாக நவம்பர் ஒன்பதாம் தேதி நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

No comments:

Post a Comment